மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை அருகே பல்வேறு கட்சியில் இருந்து விலகியவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர்.

Update: 2024-02-14 04:20 GMT
சிபிஎம்

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், அருந்தவபுரம் - தோப்புத்தெரு கிராமத்தில், பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி 25 பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். நிகழ்ச்சிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அம்மாபேட்டை ஒன்றியச் செயலாளர் ஏ.நம்பிராஜன் தலைமை வகித்தார்.

மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.வி. கண்ணன் கட்சியில் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று, கட்சியின் அமைப்பு செயல்திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினார்.  தொடர்ந்து புதிய கிளை அமைக்கப்பட்டு, கிளைச் செயலாளராக ஜி.கண்ணன் தேர்வு செய்யப்பட்டார். 

இந்த நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கே.முனியாண்டி, ரவி, யூ.சரவணன், சேகர், பாலமுருகன் உள்ளிட்ட கட்சித் தோழர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News