திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

தாராபுரத்தில் அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி முன்னணியில் திமுகவில் மாற்றுக் கட்சியினர் இணைந்தனர்.

Update: 2024-03-23 08:15 GMT

தாராபுரத்தில் அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி முன்னணியில் திமுகவில் மாற்றுக் கட்சியினர் இணைந்தனர்.

தாராபுரம் நகரச் செயலாளர் முருகானந்தம் ஏற்பாட்டில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன்,தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாதன், தொகுதி பொறுப்பாளர் கோட்டை அப்பாஸ் ஆகியோர் முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்தனர்.

அதன்படி தாராபுரம் அ.ம.மு.க நகரத் துணைச் செயலாளர் கண்ணன், அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் ஜாபர் சாதிக், உட்பட பலர் திமுகவில் இணைந்து கட்சி பணியாற்றுவதாக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதை அடுத்து நகரச் செயலாளர் முருகானந்தனை அமைச்சர்கள் பாராட்டினர். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகர், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News