விருதுநகர் அருகே மாற்றுக்கட்சியினர் பாமகவில் இணைவு

விருதுநகர் அருகே திமுக மற்றும் அதிமுக கட்சியில் இருந்து 25க்கும் மேற்பட்டோர் விலகி தங்களை பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்தனர்.

Update: 2024-06-10 14:47 GMT
திமுக மற்றும் அதிமுக கட்சியில் இருந்து 25க்கும் மேற்பட்டோர் விலகி தங்களை பாட்டாளி மக்கள் கட்சியில் இணையும் நிகழ்வு...*

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைத்து பாட்டாளி மக்கள் கட்சியில் இணைவதற்காக விருதுநகர் மாவட்டம் ஆவியூர் கிராமத்தில் இருந்து திமுக மற்றும் அதிமுகவைச் சேர்ந்த தொண்டர்கள் 25க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி பாட்டாளி மக்கள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் டேனியல் மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளர் சண்முக வேல்சாமி தலைமையில்,

  மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமா முன்னிலையில் இன்று தங்களை பாட்டாளி மக்கள் கட்சியில் இணைத்துக் கொண்டனர். மேலும் இந்த நிகழ்வின் போது பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்த தொண்டர்களுக்கு சால்வை அணிவித்தனர் மேலும் இந்த நிகழ்வின் போது பாட்டாளி மக்கள் கட்சியின் சொந்தங்கள் பலர் உடனிருந்தனர்

Tags:    

Similar News