சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் சந்திப்பு

சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் மாணவர்கள் தங்கள் பள்ளி கால நினைவுகளை நினைவு கூர்ந்து மகிழ்ந்தனர்.

Update: 2024-05-17 07:58 GMT
முன்னாள் மாணவர்கள் ஒன்றாக இணைந்து எடுத்த புகைப்படம்
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2012-13ம் கல்வியாண்டில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வை உயிரூட்டல் அறக்கட்டளை ஒருங்கிணைப்பு-செய்திருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு உயிரூட்டல் அறக்கட்டளை நிறுவனர் சம்பத்குமார் தலைமை தாங்கினார். திரளாக கலந்துக்கொண்டனர். அந்த காலக்கட்டத்தில் அவர்களுக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்கள் கலந்துக்கொண்டனர். முன்னாள் மாணவர்கள் தங்களின் பள்ளி கால நினைவுகளை நினைவு கூர்ந்து மகிழ்ந்தனர். மேலும் கல்வி கற்பித்த ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி மகிழ்ந்தனர்
Tags:    

Similar News