ஆம்பூர்:தொழிற்சாலை கழிவுநீரை நேரடியாக பாலாற்றில் விடுவதால் துர்நாற்றம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பாலாற்றில் கலக்கும் தோல் தொழிற்சாலை கழிவு நீரால் நுரை படர்ந்து காணப்படும் துர்நாற்றம் வீசுகிறது.

Update: 2023-11-05 06:08 GMT
கழிவு நீர் கலப்பால் பாலாற்றில் நுரை 
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு வரை பெய்த கனமழையால் மாராபட்டு பகுதியிலுள்ள பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அருகாமையில் செயல்பட்டுவரும் தோல் தொழிற்சாலைகள் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை நேரடியாக ஆற்றில் திறந்து விடுவதாக கூறப்படுகிறது. இதனால் ஆற்று நீர் முழுவதும் நுரை ததும்பி துர்நாற்றம் வீசுகிறது. இது குறித்து ஏற்கனவே பலமுறை புகார் அளித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் கடந்த மாதம் இதேபோல் ஆற்று நீரில் நுரை ததும்பி சென்ற போது மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்எல்ஏ ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டு ஆற்றில் கழிவு நீரை திறந்து விடும் தோல் தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் அதேபோல் ஆற்றில் கழிவு நீரை திறந்து விட்டு இருக்கக் கூடிய செயல் பகுதி மக்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News