சிவகாசியில் அம்மன் தங்க தாமரையில் பக்தர்களுக்கு காட்சியளிப்பு....

சிவகாசியில் சித்திரை விழாவின் 6 ஆம் நாளில் அம்மன் தங்க தாமரையில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

Update: 2024-05-06 11:53 GMT

  விருதுநகர் மாவட்டம், சிவகாசியில்,இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. சித்திரை திருவிழாவின் 6ம் நாள் திருவிழாவை முன்னிட்டு, சிவகாசி இந்து நாடார்கள் நவதானிய வர்த்தகர்கள் மகமைப்பண்டுக்கு சொந்தமான மண்டகப்படி மண்டபத்தில் ஸ்ரீபத்திரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

இன்று அதிகாலை, ஸ்ரீபத்திரகாளியம்மன தங்க தாமரையில் எழுந்தருளி, நான்கு ரத வீதிகளில் வலம் வரும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது ஸ்ரீபத்திரகாளியம்மன் கடைக்கோவிலுக்கு வருகை தந்து,வெள்ளி ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். சித்திரை திருவிழாவின் 6ம் திருவிழாவை முன்னிட்டு, சிவகாசி நகரின் முக்கிய இடங்களில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் இன்னிசை கச்சேரி நடைபெற்றது.

சித்திரை திருவிழாவின் சிறப்பு வாய்ந்த சிவகாசி இந்து நாடார்கள் நவதானிய வர்த்தகர்கள் மகமைப்பண்டு மண்டகப்படியில் ஸ்ரீபத்திரகாளியம்மன் 'தங்க தாமரையில்' கங்காள சொரூப திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். திருவிழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை. சிவகாசி இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டு தேவஸ்தான நிர்வாகிகள் மற்றும் திருவிழா உபயதாரர்கள் சிறப்பாக செய்துள்ளனர்.

Tags:    

Similar News