அம்மாபேட்டையில் பரபரப்பு:கோர்ட்டு ஊழியரிடம் 5½ பவுன் சங்கிலி பறிப்பு

அம்மாபேட்டையில் பரபரப்பு:கோர்ட்டு ஊழியரிடம் 5½ பவுன் சங்கிலி பறிப்பு. மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு.

Update: 2024-07-03 11:35 GMT

சங்கிலி பறிப்பு

சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (வயது 39). இவர் சேலம் கோர்ட்டில் டைப்பிஸ்ட்டாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டின் அருகே நடந்து சென்றார். அப்போது அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் அவரை பின் தொடர்ந்து வந்தார். பின்னர் திடீரென்று அவரது கழுத்தில் கிடந்த 5½ பவுன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு அந்த வாலிபர் தப்பி ஓடி விட்டார். உடனே ஜெயலட்சுமி, திருடன், திருடன் என்று கூச்சலிட்டார். இருப்பினும் திருடன் கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தலைமறைவாகி விட்டார். இந்த சம்பவம் குறித்து கோர்ட்டு பெண் ஊழியர், அம்மாபேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி புதிய குற்றவியல் சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு அந்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கோர்ட்டு பெண் ஊழியரிடம் தாலி சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் அம்மாபேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News