சாவிலும் இணைந்த தம்பதி

குமாரபாளையத்தில் கணவன் உயிரிழந்ததை தாங்க முடியாமல் அதிர்ச்சியில் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2023-12-23 16:20 GMT
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த வயதான தம்பதிகள் நாராயணன்(68) மற்றும் ராஜேஸ்வரி (67) ஆவர். இவர்கள் குமாரபாளையத்தில் உள்ள நாராயணன் நகர் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு திருமணத்திற்கு பிறகு குழந்தைகள் இல்லாததால் ஒருவருக்கொருவர் ஆதரவாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், நாராயணன் வயது மூப்பு காரணமாக நோய்வாய்ப்பட்டு படுத்தபடுக்கையாக இருந்தவரை, ராஜேஸ்வரி கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று உடல்நிலை மிகவும் மோசமடைந்து எதிர்பாராத விதமாக நாராயணன் உயிரிழந்த செய்தி தாளாமல் மனைவி ராஜேஷ்வரியும் அதிர்ச்சியில் உயிரிழந்தார். வயதான காலத்தில் ஒருவருக்கொருவர் துணையாக இருந்து வந்த நிலையில் கணவனுடன் மனைவியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News