ரயிலில் இருந்து தவறி விழுந்து முதியவர் பலி!

அரக்கோணம் அருகே ரயிலிலிருந்து தவறி விழுந்த முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-05-31 06:01 GMT

அரக்கோணம் ரயில் நிலையம்

சென்னையில் இருந்து அரக்கோணம் வரையிலான புறநகர் ரயில் நேற்று காலை 11 மணிக்கு அரக்கோணம் நோக்கி வந்து கொண்டிருந்தது. மோசூர் - அரக்கோணம் ரயில் நிலையங்களுக்கு இடையே வந்து கொண்டிருந்த போது ரயிலில் பயணம் செய்த சுமார் 60 வயது மதிக்கதக்க முதியவர் ரயிலில் இருந்து தவறி விழுந்தார். அதில் பலத்த காயம் அடைந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தபோது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து அரக்கோணம் ரயில்வே போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த முதியவர் யார்? என்பது தெரியவில்லை. சென்னை திருமுல்லை வாயலில் இருந்து அரக்கோணம் வரை பயணம் செய்வதற்கான டிக்கெட் வைத்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News