தக்கலை அருகே சாலையோரம் மயங்கி கிடந்த முதியவர் மருத்துவமனையில் உயிரிழப்பு

தக்கலை அருகே சாலையோரம் மயங்கி கிடந்த முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

Update: 2024-05-10 09:59 GMT

காவல் நிலையம்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே அழகிய மண்டபத்தில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் சாலை ஓரத்தில் கிடந்தார். 108 ஆம்புலன்ஸ் மூலம் தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்புள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் இறந்து விட்டார். இது குறித்து தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ஆனால் இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.இதனை தொடர்ந்து உடலை பிரேத பரிசோதனை செய்து போலீஸ் சார்பில் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News