மரத்தில் இருந்து கீழே விழுந்த முதியவர் பலி!
வந்தவாசி அருகே மரத்தில் இருந்து கீழே விழுந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.;
By : King 24x7 Angel
Update: 2024-05-29 07:34 GMT
பலி
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த மாசிலாமணி (வயது 67) மரத்தில் ஏறி மாங்காய் பறித்த போது கீழே விழுந்து படுகாயமடைந்தார்.அவரை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில்,அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பொன்னூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.