தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்திய அங்கன்வாடி பணியாளர்கள்!
புது மல்லவாடியில் அங்கன்வாடி பணியாளர்கள் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Update: 2024-03-27 07:13 GMT
திருவண்ணாமலை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் துறை சார்பில் 100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது .புதுமல்லவாடி பேருந்து நிறுத்தம் அருகே அங்கன்வாடி பணியாளர்கள் தேர்தல் வாசகம் வடிவில் அமர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட அலுவலர் மீனாம்பிகை, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சரண்யா, மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.