பெரம்பலூரில் அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூரில், நிதி ஒதுக்காத மத்திய அரசின் பட்ஜெட் நகலை எரித்து அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Update: 2024-02-06 03:53 GMT
பெரம்பலூரில், நிதி ஒதுக்காத மத்திய அரசின் பட்ஜெட் நகலை எரித்து அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம். பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள,தமிழ்நாடு அரசு சமூக நலத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு, பெரம்பலூர் வட்டத்தின் சார்பில், தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் மேனகா தலையில், மத்திய அரசின் பட்ஜெட்டில் தங்களுக்கு எந்த நிதியையும் ஒதுக்காததை கண்டித்து மத்திய அரசின் பட்ஜெட் நகலை எரித்து, மாநில அரசு தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், பதவி உயர்வு வழங்க வேண்டும், தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.