அமாவாசை நிறைந்த நாளில் ஆஞ்சநேயர் ஜெயந்தி

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2024-01-11 10:46 GMT

அனுமன் ஜெயந்தி

மார்கழி திங்கள் அமாவாசை நிறைந்த நாளில் அஞ்சலை மைந்தன் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா இன்று நடந்தது. திண்டுக்கல் மாவட்டம் மலைக்கோட்டை அருகே அமைந்துள்ள மலைக்கோட்டை ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு யாகம் திருமஞ்சனம் நடைபெற்றது. இதே போல அபிராமி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜையும் பிரார்த்தனையும் நடந்தது. இதே போல முள்ளிப்பாடி ஆஞ்சநேயர் கோயிலில் வடை மாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திண்டுக்கல் எம்.வி.எம் நகரில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜையும் அன்னதானமும் நடந்தது. பக்தர்கள் அதிகாலை 5 மணிக்கு பஜனைகளை பாடி ஆஞ்சநேயரை வழிபட்டனர்.
Tags:    

Similar News