அண்ணா நினைவு நாள் - அமைச்சர் சிவசங்கர் மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் 55 ஆவது நினைவு நாளை முன்னிட்டு அரியலூர் அருகே செந்துறையில் திமுகவினர் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் பேரணியாக வந்து அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2024-02-04 02:16 GMT

அண்ணா நினைவு நாள் 

பேரறிஞர் அண்ணாவின் 55 ஆவது நினைவு தினம் நேற்று கடைபிடிக்கபட்டது. இதனையொட்டி தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தலைமையில் ஊர்வலமாக வந்த திமுகவினர் அரியலூர் மாவட்டம் செந்துறை நகரிலுள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் செந்துறை ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், எழில்மாறன் மற்றும் திமுகவை சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News