நவராத்திரி விழாவை முன்னிட்டு அன்னாபிஷேகம், திருவிளக்கு பூஜை

குமாரபாளையம் நகரில் உள்ள அம்மன் கோவில்களில் நவராத்திரி விழாவையொட்டி அன்னாபிஷேகம், திருவிளக்கு பூஜை நடந்தது.

Update: 2023-10-21 00:54 GMT

அன்னாபிஷேகம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

  நவராத்திரி விழாவையொட்டி குமாரபாளையம் கோட்டைமேடு காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது. இதே போல் சேலம் சாலை, ராஜா வீதி சவுண்டம்மம் கோவில்கள், அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில்கள், மாரியம்மன் கோவில்கள், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில், கள்ளிப்பாளையம் மாரியம்மன், காளியம்மன் கோவில், பண்ணாரி மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பட்டத்தரசியம்மன் கோவிலில் அம்மனுக்கு அன்னாபிஷேகம், திருவிளக்கு பூஜை செய்யபட்டு சிறப்பு ஆராதனை நடந்தது. பெரிய மாரியம்மன் கோவில், உலக சமாதான ஆலயம், காசி விசாலாட்சி உடனமர் காசி விஸ்வேஸ்வரர் கோவில், உள்ளிட்ட பல கோவில்களில் திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கபட்டது.


Tags:    

Similar News