அரசுப்பள்ளியில் ஆண்டுவிழா கொண்டாட்டம்

ராமநாதபுரம் தொண்டி அருகே உள்ள நம்புதாளை அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடந்தது.

Update: 2024-02-16 11:18 GMT

ராமநாதபுரம் தொண்டி அருகே உள்ள நம்புதாளை அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடந்தது.

ராமநாதபுரம் தொண்டி அருகே உள்ள நம்புதாளை அரசு உயர் நிலைப்பள்ளியில் ஆண்டு விழா, விளையாட்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

தலைமை ஆசிரியர் (பொ) சேசு ரெத்தினம் தலைமை வகித்து ஆண்டறிக்கை வாசித்தார். ஊராட்சி மன்ற துனைத் தலைவர் சுமையா பானு இபுராஹிம் முன்னிலை வகித்தார். ஆசிரியர் மலை ராஜ் வரவேற்றார். மாணவர்களின் கல்வி திறன், கலை குறித்து ஆசிரியர்கள் ரமேஷ், ரகுராமன், கோபாலகிருஷ்ணன், மாரி, பெருமாள், கண்ணன் பேசினர். மாணவர்களின் கலை நிகழ்ச்சி , விழிப்புணர்வு பாடல், நாடகம் நடைபெற்றது. ஆசிரியர்கள் ராஜேஸ்வரி, அகிலா ராணி, கலா, ஜெனிபர், சீனிவா சுகி, ஜமாத் தலைவர்கள் , கிராம தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பரிசுகளை வழங்கினர். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கண்ணன், துணைத் தலைவர் ரபீக் ராஜா , பெற்றோர்கள் உட்பட பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News