சாய்பாபா கோவிலில் ஆண்டு விழா

திருக்கோவிலுார் சாய்பாபா கோவிலில் ஆண்டு விழா நடந்தது.

Update: 2024-06-25 04:57 GMT

 திருக்கோவிலுார் சாய்பாபா கோவிலில் ஆண்டு விழா நடந்தது.

திருக்கோவிலுார், தியாகி வடிவேல் நகரில் உள்ள சீரடி குபேர சாய்பாபா கோவிலில் மூன்றாம் ஆண்டு துவக்க விழா நடந்தது. அதனையொட்டி, காலை 8:00 மணிக்கு கோமாதா பூஜையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து கலச ஸ்தாபனம், யாகசாலை பூஜை, மூலவருக்கு பக்தர்களால் அபிஷேகம், ஆரத்தி பூஜை நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனையும், மதியம் 1:30 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 8:00 மணிக்கு ஆரத்தி பூஜை, 9:00 மணிக்கு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. ஏற்பாடுகள் ஆலய நிர்வாகி சுப்பு மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News