வாணியம்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை

வாணியம்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் விடிய விடிய நடத்திய திடீர் சோதனை நடத்தினர்,

Update: 2024-06-11 03:50 GMT

வாணியம்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் விடிய விடிய நடத்திய திடீர் சோதனை நடத்தினர்,


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில், திருப்பத்தூர் லஞ்ச ஒழிப்புதுறை துணை காவல் கண்காணிப்பாளர் ராஜு மற்றும் காவல் ஆய்வாளர் கௌரி, உதவி காவல் ஆய்வாளர் கணேசன் ஆகியோர் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் சார்பதிவாளர் அலுவலகத்தில் விடிய, விடிய 5 மணி நேரத்திற்க்கும் மேலாக திடீர் சோதனை மேற்க்கொண்டனர்.

அப்பொழுது சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்த கணக்கில் வராத 60ஆயிரம் ரூபாய் பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைப்பற்றினர். மேலும் வாணியம்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த சில மாதங்களாக ஆள்மாறாட்டம் செய்து, போலி பத்திரங்கள் பதிவு செய்து சர்ச்சைக்குள்ளாகிய சம்பவம் தொடர்ந்து அரங்கேறியது, குறிப்பிடத்தக்கது..

Tags:    

Similar News