பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார்” விருது பெற விண்ணப்பிக்கலாம்

பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார்” விருது பெற தகுதியான நபர்கள் இணையதளம் மூலம் 31.07.2024-க்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-06-23 15:10 GMT
மாவட்ட ஆட்சியர் 

புதுடெல்லி, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் ஆண்டுதோறும்”பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார்” விருதுக்கு 5 முதல் 18 வயதிற்குட்பட்ட தன்னலமற்ற செயல்களைச் செய்தகுழந்தைகளுக்கும், வீர தீர செயல்களில் சிறந்த சாதனைகள் செய்த குழந்தைகளுக்கும், விளையாட்டு,

சமூக சேவை, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், புதுமைகள் செய்தல், கலை மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளில் சமூகத்தில் பரவலான மற்றும் வெளிப்படையான தாக்கத்தை ஏற்படுத்தியவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருது பெறுபவர்கள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26ஆம் தேதி ”வீர்பால் திவாஸ்” அன்று அறிவிக்கப்படுவார்கள்.

இந்த விருதை பெறுபவர்கள் இந்திய குடிமகனாகவும், இந்தியாவில் வசிப்பவராகவும், 5 முதல் 18 வயதுக்குட்பட்டவராகவும், வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள இதர தகுதிகளும் இருத்தல் வேண்டும். இவ்விருது பெறுவதற்கு தகுதியுடையவர்கள் https://awards.gov.in என்ற இணையதளத்தில் 31.07.2024- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News