காவல் உதவி ஆய்வாளருக்கு பாராட்டு: சான்றிதழ் வழங்கிய ஐஜி

பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் சிறப்பாக செயப்ல்பட்ட காவல் உதவி ஆய்வாளருக்கு பாராட்டு தெரிவித்து ஐஜி சான்றிதழ் வழங்கினார்.

Update: 2023-12-31 10:24 GMT

சான்றிதழ் வழங்கிய ஐஜி

உளுந்தூர்பேட்டையில் அகில பாரத இந்து மகாசபை அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகள் செந்தில் அவரது மகன் சந்துரு, மற்றும் மாதவன் மூவரை அதிரடியாக போலீசார் கைது செய்தனர்.

இந்தக் குழுவில் பணியாற்றிய மூங்கில்துறைபட்டு காவல் உதவி ஆய்வாளர் சிவச்சந்திரனுக்கு வடக்கு மண்டல ஐஜி கண்ணன் பாராட்டு சான்றுகளை நேற்று வழங்கினார்.

Tags:    

Similar News