ஆரணி ஒன்றிய குழுக் கூட்டம் - பாமக உறுப்பினர் தர்ணா

Update: 2023-12-12 07:42 GMT

ஒன்றிய குழு கூட்டம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ஊராட்சிஒன்றியக்குழுவின் கூட்டம் அதன் தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன் தலைமையில்  நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஒன்றியக் குழு துணைத் தலைவர் ஆ.வேலாயுதம், வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதர் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களும் படிக்கப்பட்டது. பின்னர், பாமக உறுப்பினர் ஏழுமலை பேசுகையில், கூட்டத்தில் பிற துறை அதிகாரிகள் யாருமே வரவில்லை, ஏன் கூட்டத்தை நடத்த வேண்டும் எனக் கேள்வி எழுப்பி,தரையில் அமர்ந்து தர்ணா செய்தார். இந்த நிலையில், அலுவலக மேலாளர் சீனிவாசன் உறுப்பினர் ஏழுமலையை சமாதானம் செய்தார். அப்போது, ஏழுமலை அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் உறுப்பினர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, ஒன்றியக் குழுத் தலைவர் உறுப்பினரிடம் உங்கள் கோரிக்கையை அடுத்த கூட்டத்தில் வைத்து நிறைவேற்றித் தருகிறேன் . அனைத்துத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பி அடுத்த கூட்டத்தில் பங்கேற்கச் செய்யப்படும் என பதிலளித்தார். பின்னர் கூட்டம் முடிக்கப்பட்டது.
Tags:    

Similar News