தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்றவர் கைது

பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்றவர் மீது நடவடிக்கை

Update: 2024-03-20 18:02 GMT

பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே தடை செய்யப்பட்ட புகயிலைப் பொருட்களை விற்றவர் கைது செய்யப்பட்டார்.

அரவக்குறிச்சி காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதாக காவல் உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசுக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புங்கம்பாடி கார்னர் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டார்.

அதில், சக்திவேல்(47) என்பவர், தனது பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், விமல் உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. அவரது கடையில் இருந்த ஹான்ஸ் பாக்கெட்டுகளையும், விமல் 60 பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்த போலீசார் கடை உரிமையாளர் சக்திவேல் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Tags:    

Similar News