அண்ணாமலைக்கு சால்வை அணிவித்த மூதாட்டிக்கு பணம் கொடுக்க முயன்ற அர்ஜூனன் சம்பத்!

அண்ணாமலைக்கு சால்வை அணிவித்த மூதாட்டிக்கு பணம் கொடுக்க முயன்ற அர்ஜூனன் சம்பத். சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்.

Update: 2024-03-28 07:28 GMT
கோவை கோனியம்மன் கோவிலில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பு சாமி தரிசனம் செய்வதற்கு பாஜக மாநில தலைவரும் கோவை நாடாளுமன்ற வேட்பாளருமான அண்ணாமலை சென்றிருந்தார்.அவருடன் பாஜகவினர்,இந்து மக்கள் கட்சியியை சேர்ந்த நிர்வாகிகள் வந்திருந்தனர்.அப்பொழுது 1989 ஆம் ஆண்டு கொலை செய்யபட்ட இந்து முன்னணியை சேர்ந்த வீர கணேஷின் தாயார் கோவிலுக்கு வந்து இருந்தார். அப்போது அவரிடம் பாஜக வேட்பாளர் அண்ணாமலை ஆசி பெற்றார். அப்போது உடன் இருந்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தனது சட்டைப் பையில் இருந்து பணத்தை எடுத்துக் கொடுத்த வீரகணேஷின் தாயாரிடம் கொடுக்க முயன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.இதுகுறித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்திடம் கேட்ட பொழுது பூசாரிக்கு காணிக்கை அளிப்பதற்காக பணத்தை கொடுத்ததாகவும் பூசாரி அங்கிருந்து சென்று விட்டதால் நானே அந்த பணத்தை வைத்து கொண்டேன் என தெரிவித்தார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நான் இந்த தேர்தலில் ஒரு ரூபாய் கொடுக்க மாட்டேன் எனவும் குறைந்த செலவில் தேர்தல் நடத்த தொகுதியாக கோவையை காண்பிப்பேன் என உறுதி அளித்த நிலையில் அண்ணாமலைக்கு சால்வை அணிவித்ததற்காக பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
Tags:    

Similar News