ராணுவ வீரரின் குடும்பத்தில் மூன்று பேர் மாயம்

பாப்பாரப்பட்டி அருகே ராணுவ வீரரின் குடும்பத்தில் மூன்று பேர் மாயமான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-06-30 13:31 GMT
மாயம் 

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பாரப்பட்டி அருகே ஆலமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சமதர்மன் இவர் ராணுவத்தில் மிசோரம் பகுதியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அமலா, இவர்களுக்கு அஜய், என்ற மகனும், ரமணி, என்ற மகளும் உள்ளனர். சமதர்மன் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் இருந்த அமலா மற்றும் மகன், மகளை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. இதுபற்றி பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் இன்று சமதர்மன் புகார் அளித்தார். அதன்பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, மாயமான 3 பேரையும் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News