கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் குண்டர் சட்டத்தில் கைது - மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை

மதுரை சிறைக்கு மாற்றம்

Update: 2023-12-21 10:23 GMT

மதுரை சிறைக்கு மாற்றம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை உட்கோட்டத்தில் கடந்த 10.10.2023ம் தேதி பாலசுப்பிரமணியன் என்பவர் முனியாண்டி என்பவரை சாதியை சொல்லி திட்டியும் அருவளால் தாக்கியதில் முனியாண்டி என்பவர் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டார். இது தொடர்பாக முனியாண்டியின் மனைவியான பானு என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மானாமதுரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மேற்குறிப்பிட்ட பாலசுப்பிரமணியன் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிவகங்கை கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மானாமதுரை காவல் நிலைய ஆய்வாளர் முத்து கணேஷ் வேண்டுதலின் பேரில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த்ஸஒப்புதலின் அடிப்படையில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், பாலசுப்பிரமணியன் மீது குண்டர் தடுப்பு காவல் ஆணை பிறப்பித்து சிவகங்கை கிளைச்சிறையில் இருந்து மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டு தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர்விந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Tags:    

Similar News