உதவி ஆய்வாளர் மாரடைப்பால் மரணம் : எஸ்.பி., நேரில் அஞ்சலி!

மாரடைப்பால் காலமான ஆறுமுகநேரி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பாஸ்கரன் உடலுக்கு எஸ்.பி., பாலாஜி சரவணன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Update: 2024-03-14 07:22 GMT

எஸ்.பி., நேரில் அஞ்சலி

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சிறப்பு உதவி ஆய்வாளர் பாஸ்கரன்  (53), இன்று காலை தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அன்னாரது உடல் வைக்கப்பட்டிருந்த திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு இன்று (13.03.2024) தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ், ஆத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் மாரியப்பன், ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் ஷேக் அப்துல்காதர் மற்றும் காவல்துறையினர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
Tags:    

Similar News