ஆத்தூர் : நரசிங்கபுரத்தில் அதிமுக வினர் பிரச்சாரம்
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆதரித்து ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகர மன்ற உறுப்பினர் சரண்யா சந்திரன் தலைமையில் நகரச் செயலாளர் நகர மன்ற உறுப்பினர் கோபி உள்ளிட்டோர் தீவிர வாக்கு சேகரிப்பு.;
Update: 2024-04-10 05:09 GMT
வாக்கு சேகரிப்பு
campaign
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதியில் அதிமுக நகர மன்ற உறுப்பினர் சரண்யா சந்திரன் தலைமையில் நகரமன்ற உறுப்பினர் கோபி நகரச் செயலாளர் மணிவண்ணன் தேமுதிக கூட்டணி கட்சியைச் சார்ந்த நிர்வாகிகள் நகர ஒன்றிய நிர்வாகிகள் இணைந்து இரட்டை இலை சின்னத்திற்கு வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். எடப்பாடியார் தலைமையிலான நல்லாட்சி அமைந்திட நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களித்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டனர்