ஆத்தூர் : நரசிங்கபுரத்தில் அங்கன் வாடி மையத்தை MP திறந்து வைத்தார்

ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 12 வார்டு பகுதியில் ₹14 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையத்தை MP பொன் கெளதம சிகாமணி திறந்து வைத்தார்.

Update: 2024-02-28 09:05 GMT

ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 12 வார்டு பகுதியில் ₹14 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையத்தை MP பொன் கெளதம சிகாமணி திறந்து வைத்தார்.


சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட 12 வது வார்டு பகுதியில் அப்பகுதி மக்கள் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் பொன் கௌதம சிகாமணி அவர்களிடம் இப்பகுதியில் அங்கன்வாடி மையம் அமைப்பதற்கு கோரிக்கை மனு அளித்திருந்த நிலையில் ₹14 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டிடப் பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று பயன்பாட்டிற்கு கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் பொன் கௌதம சிகாமணி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் நரசிங்கபுரம் நகர மன்ற தலைவர் அலெக்சாண்டர், நகரச் செயலாளர் வேல்முருகன்,நகர மன்ற துணைத் தலைவர் தர்மராஜ், நகர மன்ற உறுப்பினர்கள் அன்னக்கிளி, நகரத் துணைச் செயலாளர் பிரகாஷ், சாந்தி, நகர நிர்வாகிகள் ராமசாமி, இளவரசு, விஜயகுமார் உள்ளிட்ட அப்பகுதி மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News