முன்விரோதம் காரணமாக விவசாயி மீது தாக்குதல்: 2 பேர் கைது

முன்விரோதம் காரணமாக விவசாயி மீது தாக்குதல் நடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-05-09 14:46 GMT

கோப்பு படம் 

பட்டுக்கோட்டையில், முன்விரோதம் காரணமாக விவசாயியை பாட்டிலால் தாக்கிய 2 பேரை கைது செய்த காவல்துறையினர்  ஒருவரை தேடி வருகின்றனர். பட்டுக்கோட்டையை அடுத்த பழஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 36) விவசாயி. இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த துரைராஜ் மகன் இளங்கோ (22),

ஜெயச்சந்திரன் மகன் மணிகண்டன் (24) ஆகியோருக்கும் மாரியம்மன் கோவில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று இளங்கோ,

மணிகண்டன் ஆகியோர் சரவணனை போன் மூலம் தொடர்பு கொண்டு பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு இடத்திற்கு வருமாறு தெரிவித்துள்ளனர். அங்கு வந்த சரவணனிடம் இளங்கோ, மணிகண்டன் மற்றும் வீரராசு ஆகியோர் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள், மதுப்பாட்டிலை உடைத்து சரவணனின் தலையில் தாக்கினர்.

இதில் படுகாயம் அடைந்த அவர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இளங்கோ, மணிகண்டன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய தம்பிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த வீரராசு என்பவரை  தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News