இலவசமாக பலூடா கேட்ட வடமாநில வாலிபர் மீது தாக்குதல் : வீடியோ வைரல்

திருப்பத்தூரில் ஓசியில் பலூடா கேட்டு வெளி மாநில இளைஞரை அடிக்க முற்பட்ட நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Update: 2024-03-10 12:54 GMT
பலூடா கடை

திருப்பத்தூர் மாவட்டம் ராஜஸ்தான் பகுதியைச் சேர்ந்த ரோஷன் வயது 48 இவர் 10 வருடத்திற்கு முன்பு ராஜஸ்தானில் இருந்து திருப்பத்தூருக்கு வந்து சொந்தமாக மூன்று டாட்டா ஏசி வாகனத்தில் ஐஸ்கிரீம் மற்றும் பலூடா விற்பனை செய்து வருகிறார்.

இந்த நிலையில் இவருக்கு மூன்று வாகனத்தில் ஒரு வாகனத்தை சேத்தான் வயது (21) என்ற வட மாநில இளைஞருக்கு கொடுத்து திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி முன்பு பலூடா விற்பனை செய்து வருகிறார் அப்போது இந்த கடைக்கு வந்த நபர் ஒருவர் ஓசியில் பலூடா கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது ஏற்பட்ட தகராறின் காரணமாக வடமாநில இளைஞரை அந்த நபர் பிளாஸ்டிக் சேரால் அடிக்க முற்படுகிறார் அதனை அருகில் இருந்த நபர் ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரவ செய்துள்ளனர். இந்த சம்பவ குறித்து திருப்பத்தூர் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு இருக்கின்றனர்

Tags:    

Similar News