கோவிலில் திருட முயற்சி - துரத்திப் பிடித்த பொதுமக்கள்

Update: 2023-12-13 02:55 GMT

கல்லல் காவல் நிலையம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே அரண்மனை சிறுவயல் பகுதியில் உள்ளது காலத்தி அய்யனார் கோவில். இக்கோவிலில் தேவகோட்டையை சேர்ந்த பாலமுருகன் மற்றும் பூமி ஆகிய இருவரும் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று பித்தளை மணிகளை திருடிய போது பொதுமக்கள் இருவரையும் துரத்தியுள்ளனர். இதில் பாலமுருகன் தப்பிய நிலையில், பூமியை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து கல்லல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News