வங்கியில் திருட முயற்சி - போலீசார் விசாரணை

மானாமதுரை இந்தியன் வங்கியில் நடந்த திருட்டு முயற்சி குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-05-21 04:57 GMT

உடைக்கப்பட்ட ஜன்னல் கம்பிகள்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அண்ணாசாலை அருகே இயங்கி வருகிறது இந்தியன் வங்கி. இந்த வங்கியை திறந்தபோது வங்கியின் இரு பூட்டுகளும் உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் வங்கியின் ஜன்னல் கம்பிகளை உடைத்து அதன் வழியாக திருடர்கள் உள்ளே புகுந்துள்ளனர். லாக்கர்கள் மற்றும் வங்கிகளை திறக்க முயற்சித்த நிலையில் எந்த ஒரு பொருளும் திருடு போகவில்லை என வங்கியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News