செய்யூர் அருகே கவன ஈர்ப்பு பட்டினி போராட்டம் !

செங்கல்பட்டு மாவட்டம்,செய்யூர் வட்டத்திற்கு உட்பட்ட நெல்வாய் பாளையம் ஊராட்சியில் அடங்கிய நெல்வாய்பாளையம் மற்றும் மாணிக்குப்பம் இந்த இரு கிராமங்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு பலர் அனுபவித்து வருகின்றனர்.

Update: 2024-06-13 04:41 GMT

போராட்டம்

செங்கல்பட்டு மாவட்டம்,செய்யூர் வட்டத்திற்கு உட்பட்ட நெல்வாய் பாளையம் ஊராட்சியில் அடங்கிய நெல்வாய்பாளையம் மற்றும் மாணிக்குப்பம் இந்த இரு கிராமங்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு பலர் அனுபவித்து வருகின்றனர். இதை மீட்டுத்தர ஆய்வு பஞ்சமி நில வீட்டுக்குள் மூலம் ஆய்வுஅறிக்கையை தாசில்தார் வருவாய் கோட்டாட்சியரிடம் வழங்கி இருந்தோம்.

இது குறித்து,இந்த நிலத்தை மீட்டு உங்களிடம் ஒப்படைக்க சட்டத்தில் வழிவகை இல்லை என மதுராந்தகம் சார் ஆட்சியர் கூறி இருந்தார். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கடந்த 9 மாதங்களுக்கு முன்பாக இந்த ஆய்வு அறிக்கை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தோம்.

ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் எடுக்கவில்லை நாங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த பஞ்சமி நிலத்தை மீட்க போராடி வருகிறோம் ஆகவே மாவட்ட நிர்வாகத்திற்கு எங்களுடைய போராட்டம் ஈர்க்கப்பட வேண்டும் என்பதற்காக இன்று நூற்றுக்கும் மேற்பட்டோர் நெல்வாய் பாளையத்தில் கவன ஈர்ப்பு பட்டினி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News