மரத்தில் தொங்கிய நிலையில் ஆட்டோ ஓட்டுநர்
திண்டுக்கலில் ஆட்டோ ஓட்டுநரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-01-21 11:35 GMT
சடலமாக மீட்பு
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள சாத்தாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சின்னக்கருப்பண் - இவரது மகன் மதன்குமார் (21). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். நேற்றிரவு இரவு வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார். சனிக்கிழமை காலை பள்ளபட்டி பகுதியில் உள்ள ஒரு புளியந்தோப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.அவ்வழியாக வந்த மாடு மேய்க்கச்சென்ற சென்றவர் பார்த்து நத்தம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து போலீஸார் மதன்குமார் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.