குழந்தை இல்லாத ஏக்கத்தில் ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை

தெங்கம்புதூர் அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

Update: 2024-06-14 10:35 GMT

பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டம் தெங்கம்புதூர் அருகே புது குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (39). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி திவ்யா (33). இவர் ஈத்தாமொழி தபால் நிலையத்தில் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆகிறது. எனினும் குழந்தைகள் இல்லை. இதனால் அஜிகுமார் மன வருத்தத்தில் இருந்து வந்தார் என கூறப்படுகிறது.       

 நேற்று காலை தபால் நிலையம் சென்ற திவ்யா மாலையில் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் உள்ள படுக்கை அறையில் அஜித்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அஜித்குமாரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர்.    

 அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இது தொடர்பாக திவ்யா சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். உயிரிழந்த அஜித்குமார் உடல் பிரேத பரிசோதனை இன்று நடந்தது.

Tags:    

Similar News