திருமணம் ஆகாத ஏக்கத்தில் ஆட்டோ டிரைவர் தற்கொலை
தூத்துக்குடியில் திருமணம் ஆகாத ஏக்கத்தில் லோடு ஆட்டோ டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
By : King 24X7 News (B)
Update: 2023-12-07 09:28 GMT
தூத்துக்குடியில் திருமணம் ஆகாத ஏக்கத்தில் லோடு ஆட்டோ டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி ஆரோக்கியபுரம் 2வது தெருவைச் சேர்ந்தவர் ஜோசப் மகன் ஜேசு ரெனால்டு ஸ்னோகன் (38). லோடு ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறார்.
இவருக்கு திருமணம் ஆகாததால் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே 2 முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை குடும்பத்தினர் மீட்டு காப்பாற்றியுள்ளனர். இந்நிலையில் நேற்று அவர் தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக தாளமுத்துநகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மணி மாறன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.