ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை காவல்துறையினர் விசாரணை
வெங்கட்டம்பட்டியில் ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை வருகின்றனர்.;
Update: 2024-04-05 02:45 GMT
தற்கொலை
தர்மபுரி மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நல்லம்பள்ளி அருகே வெங்கட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் துரை ஆட்டோ ஓட்டுநர். இவருக்கு திருமண மாகி 11 ஆண்டுகள் ஆகிறது. மனைவி, ஒரு மகள் உள்ளனர். நேற்று வெங்கட்டம்பட்டி முனியப்பன் கோவில் பகுதியில் உள்ள மரம் ஒன்றில் துரை தூக்கில் பிணமாக தொங்கினார். இது குறித்து தகவல் அறிந்த அதியமான் கோட்டை காவல்துறையினர் விரைந்து சென்றனர். துரையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக அதியமான் கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.