ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநர் பலி
By : King 24X7 News (B)
Update: 2023-11-02 13:25 GMT
கோப்பு படம்
சிவகங்கை மாவட்டம், கோவானூர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் ராமர். இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வரும் நிலையில் தனது ஆட்டோவில் பில்லூர் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென ஆட்டோ கவிழ்ந்ததில் தலையில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து அவரது மனைவி கற்பகவல்லி அளித்த புகாரின் அடிப்படையில் சிவகங்கை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்