திருக்கோவிலூரில் அங்கவை சங்கவை விருது வழங்கும் விழா

திருக்கோவிலூர் கோவல் தமிழ்ச் சங்கம் சார்பில் சிறந்த மாணவிகளுக்கு அங்கவை, சங்கவை விருது மற்றும் பாராட்டு பட்டயம் வழங்கும் விழா நடந்தது.

Update: 2024-02-28 13:58 GMT

திருக்கோவிலூர் கோவல் தமிழ்ச் சங்கம் சார்பில் சிறந்த மாணவிகளுக்கு அங்கவை, சங்கவை விருது மற்றும் பாராட்டு பட்டயம் வழங்கும் விழா நடந்தது.


திருக்கோவிலூர் கோவல் தமிழ்ச் சங்கம் சார்பில் சிறந்த மாணவிகளுக்கு அங்கவை, சங்கவை விருது மற்றும் பாராட்டு பட்டயம் வழங்கும் விழா நடந்தது. திருக்கோவிலூர் கோவல் தமிழ்ச் சங்கம் சார்பில், அங்கவை சங்கவை விருது மற்றும் தமிழில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டுப்பட்டயம் வழங்கும் விழா பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. தமிழ்ச் சங்கத் தலைவர் உதியன் தலைமை தாங்கினார்.

செயலாளர் பாரதிமணாளன் வரவேற்றார். தலைமை ஆசிரியர் ஜெயஸ்ரீ துவக்க உரையாற்றினார்.சங்க உறுப்பினர் குணா, முன்னாள் ராணுவ வீரர் கல்யாண் குமார் முன்னிலை வகித்தனர். நகராட்சி சேர்மன் முருகன் பண்பாட்டு நலனில் சிறந்து விளங்கும் அரசு பள்ளி மாணவிகளுக்கு அங்கவை, சங்கவை விருது மற்றும் பாராட்டு பட்டயம், சான்றிதழ்களை வழங்கினார்.

மயிலம் தமிழ் கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு தமிழ் மொழியில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு ரூ. 40 ஆயிரம் மதிப்பில் பரிசுகளை வழங்கினார். கல்வெட்டு ஆய்வாளர் வீரராகவன், ஓய்வு பெற்ற ஆசிரியர் அருள்நாதன் தங்கராசு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். திருக்குறள் கழக அறக்கட்டளை துணைத் தலைவர் உலக மாதேவி நன்றி கூறினார்

Tags:    

Similar News