பன்முக கலாச்சார போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்குதல்

கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் பன்முக கலாச்சார போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சான்றிதழ்களை வழங்கினார்.

Update: 2024-02-20 12:22 GMT

மாவட்ட ஆட்சித்தலைவர் சான்றிதழ்களை வழங்கினார்

கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்வு கூட்டத்தின் வாயிலாக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நடத்தப்பட்ட பன்முக கலாச்சார போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
Tags:    

Similar News