குழந்தை கடத்தல் - பாலியல் சீண்டல் குறித்து விழிப்புணர்வு !

திண்டுக்கல் ரெயில் பயணிகளுக்கு குழந்தை கடத்தல் மற்றும் பாலியல் சீண்டல் குறித்து ரெயில் நிலையத்தில் உள்ள பயணிகளுக்கு ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2024-03-30 06:33 GMT

விழிப்புணர்வு

திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில்வே போலீஸ் நிலையம் சார்பில் ரெயில்வே போலீஸ் ஏ.டி.ஜி.பி. வனிதா,போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் ஆகியோர் உத்தரவின் பேரில், ரெயில் பயணிகளுக்கு குழந்தை கடத்தல் மற்றும் பாலியல் சீண்டல் குறித்து ரெயில் நிலையத்தில் உள்ள பயணிகளுக்கு ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பாலியல் ரீதியாக சீண்டல்களை ஏற்படுத்தும் நபர்கள் மீது நீங்கள் உடனடியாக தகவல் தெரிவிக்கலாம். இதற்காக ரெயில்வே நிர்வாகம் காவல் உதவி எண் 1512 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் ஓடும் ரெயில்களில் அல்லது பிளாட்பாரங்களில் இருக்கும் போலீசார் உடனடியாக சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை மேற்கொளப்படும் என்றனர்.
Tags:    

Similar News