சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

திருச்செங்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, அதிகாரிகள் பிரச்சாரம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Update: 2024-01-22 14:46 GMT

திருச்செங்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, அதிகாரிகள் பிரச்சாரம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

வருடம் தோறும் ஜனவரி மாதம் சாலை பாதுகாப்பு மாதமாக அனுசரிக்கப்படுகின்றது. அதன்படி, நெடுஞ்சாலைதுறை, போக்குவரத்துறை, காவல்துறை அதிகாரிகள் நேற்று, எலச்சிபாளையம் அருகேயுள்ள, ராசிபுரம் சாலையில் உள்ள குமரமங்கலம் சந்திப்பு, திருச்செங்கோடு அடுத்த பரமத்திசாலை மண்கரடுமேடு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் டிரைவர்களிடம் சாலை பாதுகாப்பு பிரச்சாரம் செய்து, விபத்துகளை தடுக்கும் முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கி, கூட்டாய்வு மேற்கொண்டனர்.
Tags:    

Similar News