நடமாடும் வாகனத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்து விழிப்புணர்வு

நடமாடும் வாகனத்தினை கொடியசைத்து ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

Update: 2024-04-12 13:11 GMT

விழிப்புணர்வு வாகனத்தை தொடங்கி வைத்த ராதாகிருஷ்ணன்

நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024னை முன்னிட்டு, மாவட்ட தேர்தல் அலுவலரும் கூடுதல் தலைமைச் செயலாளரும் ஆணையாளருமான ராதாகிருஷ்ணன், 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உடைய இந்திய குடிமக்களாகிய நாங்கள் 100% வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்துடன் கூடிய நடமாடும் வாகனத்தினை ரிப்பன் கட்டட வளாகத்தில் இன்று (12.04.2024) கொடியசைத்து தொடங்கி வைத்து, கையெழுத்திட்டு விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்.

இந்நிகழ்வில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் குமார், கதிர்வேலு மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News