உலக தண்ணீர் தின விழிப்புணர்வு போட்டி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் துறிஞ்சிப்பட்டி நடுநிலைப்பள்ளியில் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-03-23 17:09 GMT

வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் துறிஞ்சிப்பட்டி நடுநிலைப்பள்ளியில் சர்வதேச தண்ணீர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் போட்டிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் க.சாந்தி தலைமை தாங்கினார்.

சர்வதேச தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும் போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி உட்பட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊத்தங்கரை ஆண்கள் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கு.கணேசன் கல்வி உபகரணங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் வெண்ணிலா, ரோஜா ரமணி, சத்தியவதி, ரேகா மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது தொடர்பான உறுதிமொழி அனைவரும் எடுத்துக் கொண்டனர். போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் கல்வி உபகரணங்களை ஆசிரியர் கணேசன் வழங்கி வாழ்த்தினார்.

Tags:    

Similar News