சைபர் குற்றம் தடுப்பது குறித்த விழிப்புணர்வு

திருவள்ளூரில் சைபர் கிரைம் குற்றங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது.

Update: 2024-03-02 17:43 GMT

சைபர் குற்றம் தடுப்பது குறித்த விழிப்புணர்வு

திருவள்ளூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் நேற்று திருவள்ளூரில் சைபர் கிரைம் குற்றங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு நடத்தினர். திருப்பாச்சூர் திருமுருகன் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை, திருவள்ளூர் ஏ.எஸ்.பி., விவேகானந்தாசுக்லா மற்றும் ஏ.டி.எஸ்.பி., மீனாட்சி ஆகியோர் துவக்கி வைத்தனர். திருவள்ளூர் காமராஜர் சிலையிலிருந்து துவங்கிய விழிப்புணர்வு பேரணி, நகராட்சி அலுவலகம் அருகே நிறைவடைந்து. விழிப்புணர்வு பேரணியில் காவல் ஆய்வாளர்கள் மணவாளநகர் ரவிக்குமார், திருவள்ளூர் போக்குவரத்து நாகராஜன் சைபர் கிரைம் பாரதி மற்றும் போலீசார் பங்கேற்றனர்.
Tags:    

Similar News