சங்கராபுரத்தில் விழிப்புணர்வு ஊர்வலம்

லோக்சபா தேர்தலில் 100 சதவீதம் வாக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

Update: 2024-03-15 05:57 GMT

விழிப்புணர்வு ஊர்வலம்

லோக்சபா தேர்தலில் 100 சதவீதம் வாக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் இருந்து துவங்கிய ஊர்வலத்திற்கு தாசில்தார் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன், தேர்தல் துணை தாசில்தார் தேவதாஸ் முன்னிலை வகித்தனர். கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து மும்முனை சந்திப்பில் முடிவடைந்தது. நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பிரியதர்ஷினி, வருவாய் ஆய்வாளர் கல்யாணி, தேர்தல் உதவியாளர் தனசேகரன், வி.எ.ஓ.,வரதராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News