திருவாரூரில் சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி

Update: 2023-12-05 01:26 GMT

சிறுதானிய உணவு கண்காட்சி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தின் சார்பில் 2023 ஐ சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ.நா அறிவித்ததனை தொடர்ந்து பொதுமக்கள் நுகர்வோர்களுக்கு இடையே பாரம்பரிய உணவான சிறுதானியங்கள் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. கண்காட்சியில் சிறுதானிய உணவுகள் சிறப்பாக தயார் செய்து காட்சிப்படுத்தி உரிய குறிப்புகளுடன் பொதுமக்கள் ஆகிய நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பான செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அரசு துறைகள், சுய உதவி குழுக்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் ,குடிமக்கள் ஆகிய அமைப்புகளின் பங்களிப்பினை பரிசீலனை செய்து முதல் மூன்று இடங்களை தேர்வு பிடித்தவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுத்தொகையுடன் சான்றிதழ்களையும் வழங்கினார்.
Tags:    

Similar News