வெள்ளியனையில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி

வெள்ளியனையில் சாலை பாதுகாப்பு குறித்து தனியார் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

Update: 2024-02-08 06:15 GMT

சாலை பாதுகாப்பு குறித்து தனியார் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு பேரணி. கரூர் மாவட்டம் வெள்ளியணை கடைவீதியில் அமராவதி கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட மாணவ- மாணவிகள் பங்கேற்ற சாலை விழிப்புணர்வு பேரணி வெள்ளியணை கடைவீதியில் நடைபெற்றது. இந்த பேரணியை வெள்ளியணை ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

வெள்ளியணை காவல் உதவி ஆய்வாளர் தமிழ்ச்செல்வன், கல்லூரியின் தமிழ் துறை பேராசிரியர் ரேவதி, துணை பேராசிரியரும், கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்ட அலுவலருமான சிவராமன் உள்ளிட்ட மாணவ- மாணவிகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு, பொது மக்களிடையே சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பி சென்றனர். வெள்ளியணை ஊராட்சி அலுவலகத்தில் இருந்து, கடைவீதி வழியாக பிஎஸ்என்எல் அலுவலகம் சென்று மீண்டும் Chowdhury அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பேரணி நிறைவு பெற்றது.

Tags:    

Similar News