தமிழில் பெயர் பலகை வைக்கக்கோரி விழிப்புணர்வு பேரணி

ஈரோட்டில் வணிக சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நிறுவனங்கள் பெயர் பலகைகள் தமிழில் வைக்குமாறு வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது.

Update: 2024-02-02 11:05 GMT

தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் வணிக நிறுவனங்கள் பெயர் பலகைகள் தமிழாக்கத்தில் பெயர் வைக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணியை தமிழகம் முழுவதும் முன்னெடுக்க உள்ளனர்.இதனை தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் இருந்து முதலாவதாக தொடங்கி உள்ளனர்.

ஈரோடு காந்தி சிலை முன்பு இருந்து தொடங்கிய இருசக்கர விழிப்புணர்வு பேரணியை மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி மற்றும் தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரம ராஜா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் தலைவர் விக்ரம ராஜா , வணிக நிறுவனங்கள் பெயர் பலகைகள் தமிழாக்கம் செய்தால் ஜிஎஸ்டி கணக்கில் சிக்கல் வராது என்று தமிழக அரசு வியாபாரிகளுக்கு உறுதி அளித்துள்ளதாக கூறினார்.

Tags:    

Similar News